எழுவர் விடுதலை -அமைச்சரவை ஆலோசனை #LiveUpdates

ராஜிவ் காந்தி கொலைவழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி உள்ளிட்ட 7 பேரின் முன்விடுதலை குறித்து ஆளுந‌ருக்கு பரிந்துரைக்க தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது என அண்மையில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்நிலையில் பெரும் எதிர்பார்ப்புக்கிடையே தமிழக அமைச்சரவைக் கூட்டம் இன்று மாலை நடைபெற உள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று மாலை 4 மணியளவில் நடைபெ‌றும் அமைச்சரவைக் கூட்‌டத்தில் 7 பேரின் முன்விடுதலை குறித்து ஆளுநருக்கு பரிந்துரைப்பது குறித்து ஆலோ‌சிக்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

avatar Puthiyathalaimurai